ஜார்கண்ட்: லோஹர்டகாவில் 144 தடை உத்தரவு
ஜார்கண்டில் உள்ள லோஹர்டகாவின் ஹிர்ஹி கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவர் பலியானர், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் உள்ள லோஹர்டகாவின் ஹிர்ஹி கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவர் பலியானர், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் கூறுகையில்,
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோஹர்டகா மாவட்டத்தில் உள்ள ஹிர்ஹி பகுதியில் ஷோபா யாத்திரையின்போது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர். பல வாகனங்கள் எரிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
ராம நவமியின்போது இருபிரிவினருக்கு இடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்றதை முன்னிட்டு ஹிர்ஹி கிராமத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் போலீஸ் தரப்பில், கூடுதல் படைகள் மற்றும் மூத்த அதிகாரிகள், இரண்டு, துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் 3 கண்காணிப்பாளர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமை கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மோதலில் உயிரிழந்தவர், லதேஹர் மாவட்டத்தில் வசிப்பவர். இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளோம். தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.