இந்தியா

நேஷனல்​ ஹெரால்டு வழக்கு: மல்லிகார்ஜுனா கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை

DIN

நேஷனல்​ ஹெரால்டு வழக்கில் பண மோசடி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி அமலாக்கத்துறை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கேவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் சில விவகாரங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளதால் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அமலாக்கத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, அதன் பதிப்பாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டி, சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT