ஆந்திரம்: தொழிற்சாலையில் தீ விபத்து; 6 பேர் பலி
ஆந்திரத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.
ஆந்திரத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தைச் சேர்ந்த அக்கிரெட்டிகுடேம் பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று(ஏப்ரல்-13) இரவு நைட்ரிக் அமிலம் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால், விபத்தின்போது பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் பலியாகினர். 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.