பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும்: பிரதமர்

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையால் அடுத்த 10 ஆண்டுகளில்

DIN

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையால் அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குஜராத்தில் 1,100 இடங்களுடன் கூடிய 9 மருத்துவ கல்லூரிகளே இருந்தன.  ஆனால் இன்று 6 ஆயிரம் இடங்களுடன் கூடிய 36 மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

பிரதமர் மோடி கரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை என்றும், மக்கள் அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். இந்தியாவில் தோன்றிய யோகா மற்றும் ஆயுர்வேதம் தொற்று நோய்களின் போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றார்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்ததால், தொற்று நோய்களின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றார்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தின் போது, ​​கட்ச் மாவட்டத்தில் உள்ள குடிமக்கள் அதிகபட்ச பங்கேற்பை உறுதி செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT