இந்தியா

ஒடிசாவில் மிதமான நிலநடுக்கம்

DIN

ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள தஸ்பல்லா நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை 11.19 மணியளவில் உணரப்பட்டதாகவும், கஞ்சம் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம், ஒடிசாவின் கலாஹண்டி, நபரங்பூர் மாவட்டங்களில் 3.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT