நாட்டில் புதிதாக 1,247 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,247 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,247 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. திங்கள்கிழமை 2 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) 1,247 ஆகக் குறைந்துள்ளது.
இதையும் படிக்க | தில்லி எல்லை மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம்
மேலும் 928 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
இதுவரை மொத்தம் 4,25,11,701 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,966 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11,860 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி:
நாட்டில் இதுவரை மொத்தம் 1,86,72,15,865 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.