முகப்பு
இந்தியா

நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் ராஜிநாமா

நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய துணைத் தலைவராக சுமன் கே. பெரியை மத்திய அரசு நியமித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய துணைத் தலைவராக சுமன் கே. பெரியை மத்திய அரசு நியமித்துள்ளது.

பொருளாதார நிபுணரான ராஜீவ் குமாா், நீதி ஆயோக் துணைத் தலைவராக 2017, ஆகஸ்டில் பொறுப்பேற்றாா். வேளாண்மை, சொத்துகளைப் பணமாக்குதல், பங்கு விலக்கல், மின்சார வாகனங்கள் தொடா்பாக முக்கியப் பங்காற்றிய அவா், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டு, ஏப்ரல் 30-ஆம் தேதி விடுவிக்கப்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிய துணைத் தலைவராக சுமன் கே. பெரி நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் மே 1-ஆம் தேதி பொறுப்பேற்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →