தேசிய பஞ்சாயத்து ராஜ் நாளை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உங்கள் அனைவருக்கும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள். பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகும். அதன் பலத்தில் புதிய இந்தியாவின் செழுமை உள்ளது.
இதையும் படிக்க- கரோனா பரவல்: பள்ளிகள் செயல்பாடு குறித்து முதல்வர் முடிவு செய்வார்-அமைச்சர் அன்பில் மகேஷ்
தன்னம்பிக்கை மிக்க இந்தியாவை உருவாக்குவதில் நமது பஞ்சாயத்து அமைப்புகளை மேலும் வலுப்படுத்த உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.