இந்தியா

ஜஹாங்கீர்புரி வன்முறை: குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் மேற்கு வங்கத்தில் கைது

DIN


தில்லி ஜஹாங்கீர் புரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர் தில்லி காவல் துறையினரால் மேற்கு வங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லி காவல் துறை இதுபற்றி கூறியதாவது:

"தில்லி காவல் துறை குழு இவரைக் கடந்த இரண்டு வாரங்களாகத் தேடி வருகிறது. மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. மேற்கு வங்கத்திலுள்ள சிறப்புப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவின் பல்வேறு குழுக்கள் அவரை இன்று அவரது உறவினர் கிராமத்தில் வைத்து கைது செய்தன.

ஜஹாங்கீர்புரி வன்முறைக்குப் பிறகு தப்பியோடிய அவர் தனது இடங்களை மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார். அவர் மேற்கு வங்கத்தில் இடம்பெயர்ந்துகொண்டே இருந்திருக்கிறார்."

இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல் துறை இதுவரை 3 சிறார்கள் உள்பட மொத்தம் 30 பேரைக் கைது செய்துள்ளது. முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) காலை ஜாஃபர் மற்றும் பாபுதின் எனும் சகோதரர்களைக் கைது செய்தது தில்லி காவல் துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT