தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 4 பேர் பலி 
இந்தியா

மத்தியப் பிரதேசம்: தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 4 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

ANI


ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஜபல்பூர் பகுதியில் உள்ள கோஹல்பூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியான தாமோஹ் நகா அருகே உள்ள நியூ லைஃப் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்துநேரிட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான மருத்துவமனையில் தீயை அணைக்கும் பணியும் நோயாளிகளை மீட்கும் பணியும் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவல்துறை கூறுகையில், மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். இது மிகப்பயங்கர தீ விபத்தாக உள்ளது. மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.  தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் மரணமடைந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படு என்று மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT