இந்தியா

செப். 1 முதல் முதுநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு

DIN


முதுநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) செப்டம்பர் 1 முதல் நடைபெறும் என்று பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் ஜெகதீஷ் குமாா் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 2022-23-ஆம் கல்வியாண்டில் முதுநிலை படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை சியுஇடி தேர்வெழுத விண்ணப்பித்திருப்பவர்களுக்கான தேர்வு மையங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT