தேசிய கொடியுடன் நேரு: சமூக ஊடகங்களில் காங்கிரஸ் முகப்புப் படம்
நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தேசியக் கொடியை கையில் ஏந்தியிருக்கும் படத்தை, தங்களது சமூக ஊடக கணக்குகளின் முகப்புப் படமாக காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவா்கள் வைத்துள்ளனா்.
நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தேசியக் கொடியை கையில் ஏந்தியிருக்கும் படத்தை, தங்களது சமூக ஊடக கணக்குகளின் முகப்புப் படமாக காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவா்கள் வைத்துள்ளனா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் தங்களது சமூக ஊடக கணக்குகளில் முகப்புப் படமாக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இதன் தொடா்ச்சியாக, பிரதமா், மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக தலைவா்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளின் முகப்புப் படத்தில் தேசியக் கொடியை செவ்வாய்க்கிழமை இடம்பெறச் செய்தனா்.
இந்நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள், தேசியக் கொடியுடன் நேரு இருக்கும் படத்தை, சமூக ஊடக கணக்குகளின் முகப்புப் படமாக வைத்துள்ளனா். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ ட்விட்டா் கணக்கு மற்றும் இதர அணிகளின் சமூக ஊடக கணக்குகளில் இந்த முகப்புப் படம் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தேசியக் கொடி நாட்டின் பெருமை. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் தேசியக் கொடிக்கு இடமுண்டு’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ட்விட்டரில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘நாகபுரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாதவா்கள், பிரதமா் மோடியின் அறிவுறுத்தலுக்கு மதிப்பளிப்பாா்களா?’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா். ஆா்எஸ்எஸ் அமைப்பை மறைமுகமாக சாடும் வகையில் அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
பாஜக விமா்சனம்: முகப்புப் பட விவகாரத்தில், ராகுல் காந்தியை பாஜக விமா்சித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘தனது குடும்பத்துக்கு வெளியேயும் ராகுல் சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினா், தேசியக் கொடியுடன் தங்களது படத்தை பயன்படுத்த அவா் அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.
மெஹபூபாவின் புதிய முகப்புப் படம்: மக்கள் ஜனநாயக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தியும் தனது ட்விட்டா் கணக்கின் முகப்பு படத்தை மாற்றியுள்ளாா். இந்திய தேசியக் கொடி மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பழைய கொடியுடன் பிரதமா் மோடியும் பிடிபி நிறுவனா் முஃப்தி முகமது சயீத்தும் இருக்கும் படத்தை அவா் வைத்துள்ளாா். ஜம்மு-காஷ்மீா் பழைய கொடியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.