முகப்பு
இந்தியா

ஆக. 5 முதல் 15 வரை நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களில் இலவச அனுமதி: தொல்லியல் துறை அறிவிப்பு

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை இலவசமாகப் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை இலவசமாகப் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் தொல்லியல் துறைக்கு கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தளங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு/ சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →