இந்தியா

ம.பி.யில் சாலை விபத்து: 7 பேர் பலி, பலர் காயம்

PTI

மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் சத்னா மாவட்டங்களில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். 

பாக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தார் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள டெஹ்ரி கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்று துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி திலீப் சிங் பில்வால் தெரிவித்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் 25 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள். நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கார் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே வாகனத்தை விட்டு கார் ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். 

அடுத்ததாக, சத்னா மாவட்டத்தில், மாவட்ட தலைமையகத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள கைர்ஹானி கிராமத்திற்கு அருகே ஜீப் கால்வாயில் கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர் என்று ராம்நகர் காவல் நிலைய பொறுப்பாளர் ரோஹித் யாதவ் தெரிவித்தார்.

அதே வாகனத்தில் பயணித்த மேலும் 7 பேர் படுகாயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT