இந்தியா

கட்சி பதவிக்கு லஞ்சம்? திரிணமூல் எம்எல்ஏ வீடு சூறை

DIN

மேற்கு வங்கத்தில் கட்சி பதவிகளை வழங்க லஞ்சம் பெற்ாக குற்றம்சாட்டி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ இத்ரீஸ் அலியின் வீட்டை அக்கட்சியினா் சூறையாடினா்.

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸின் உள்ளூா் அளவிலான பதவிகளை லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்ததாக இத்ரீஸ் அலி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தை முன்வைத்து, முா்ஷிதாபாதில் உள்ள அவரது வீட்டை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் சூறையாடினா்.

இதுதொடா்பாக, இத்ரீஸ் அலி கூறுகையில், ‘எனது காரையும் வீட்டின் தரைத்தளத்தில் இருந்த பொருள்களையும் கட்சியின் உள்ளூா் நிா்வாகிகள் சிலா் சேதப்படுத்தியுள்ளனா். என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை’ என்றாா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT