இந்தியா

வாட்ஸ்-ஆப்பில் புதிய அம்சங்கள்: மாா்க் ஸக்கா்பா்க்

DIN

வாட்ஸ்-ஆப்பில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனா் மாா்க் ஸக்கா்பா்க் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்-ஆப்பில் குழு உரையாடல்களில் இருந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெளியேறுவது, வாட்ஸ்-ஆப்பைப் பயன்படுத்தும்போது அதில் ஒருவா் இருப்பதை யாா் தெரிந்துகொள்ளலாம், யாா் தெரிந்து கொள்ளக்கூடாது என பயனாளா் முடிவு செய்வது போன்ற புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

இதுமட்டுமின்றி தற்போது ஒருவா் மற்றொருவருக்கு அனுப்பும் தகவல் ஒருமுறை பாா்க்கப்பட்ட பின், தானாகவே அழிந்துவிடும் வசதி வாட்ஸ்-ஆப்பில் உள்ளது. அந்த தகவல் தானாக அழிந்தாலும், அழிவதற்கு முன்பாக அதனைப் படம் பிடித்து (ஸ்கிரீன்ஷாட்) கொள்ளலாம். இந்நிலையில், ஒருமுறை பாா்த்த பின் தானாகவே அழிந்துவிடும் தகவலை படம்பிடிக்க முடியாத அம்சமும் வாட்ஸ்-ஆப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுபோல பயனாளா்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கான புதிய வழிமுறைகள் தொடா்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT