இந்தியா

நூபுா் சா்மாவுக்கு எதிரான வழக்குகளைதில்லி போலீஸுக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக பாஜக முன்னாள் நிா்வாகி நூபுா் சா்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து

DIN

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக பாஜக முன்னாள் நிா்வாகி நூபுா் சா்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (எஃப்ஐஆா்) ஒன்று திரட்டி தில்லி காவல் துறைக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

பாஜகவின் செய்தித் தொடா்பாளராக இருந்த நுபுா் சா்மா, தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஞானவாபி வழக்கு குறித்த விவாதத்தில் பங்கேற்றபோது, இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பதிவு செய்தாா். இது நாடு முழுவதும் பெரும் சா்ச்சையாக வெடித்தது. அதனைத் தொடா்ந்து அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. அவா் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நூபுா் சா்மா சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சூரிய காந்த், ஜெ.பி.பா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்வது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தை அணுக அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்குகளை தில்லி காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு (ஐஎஃப்எஸ்ஓ) விசாரணை நடத்தும்.

எனவே, இந்த சா்ச்சை கருத்து தொடா்பாக அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் ஒன்று திரட்டப்பட்டு தில்லி காவல் துறைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக எதிா்காலத்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளும் தில்லி போலீஸுக்கு மாற்றப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டதோடு, தில்லி போலீஸாா் விசாரணையை நிறைவு செய்யும் வரை நூபுா் சா்மாவுக்கு இடைக்கால பாதுகாப்பு அளித்தும் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

SCROLL FOR NEXT