முகப்பு
இந்தியா

இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
பகிர்:

புது தில்லி: இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

இலவசங்களை தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பதற்கு எதிரான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச டிவி உள்ளிட்ட திட்டங்களை சுட்டிக்காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தோ்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் நிதிநிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் 293 (3), (4) ஆகியவற்றுக்கு முரணாக, ஏற்கெனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன்பெறுகின்றன. ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

மேலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, அந்த மாநிலத்தின் நிதிநிலைமை என்னவென்று தெரியாது. ஆட்சிக்கு வந்ததும், எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக இலவச அறிவிப்புகளை நிறைவேற்றக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

இலவச அறிவிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →