முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

Updated On : 11 ஆகஸ்ட், 2022 at 1:30 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, மேஹாத், சிற்றுண்டிச்சாலை, ராம்பன் ஆகிய இடங்களில் மண்சரிவு மற்றும் பெரிய கற்கள் உருண்டு விழுந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. முகலாய சாலை மற்றும் எஸ்எஸ்சி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை இதுவாகும். சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.