ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவல் துறை அதிகாரி பலி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரவு நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் காவல் துறை அதிகாரி பலியானாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரவு நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் காவல் துறை அதிகாரி பலியானாா்.
தெற்கு காஷ்மீரில் குல்காம் மாவட்டம் கைமோஹ் பகுதியில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரவு கையெறி குண்டு தாக்குதல் நடத்தினா். இதில், அங்கு பணியிலிருந்த காவல் துறை அதிகாரி தாஹிா் கான் பலத்த காயமடைந்தாா். பின்னா், ஆனந்த்நாக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். அவா் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவராவாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.