முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

நாட்டில் மேலும் 14,917 பேருக்கு கரோனா

நாட்டில் ஒரேநாளில் மேலும் 14,917 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

இந்தியா

நாட்டில் மேலும் 14,917 பேருக்கு கரோனா

நாட்டில் ஒரேநாளில் மேலும் 14,917 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:04 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் ஒரேநாளில் மேலும் 14,917 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,917 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,42,68,381 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,17,508 ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 32 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,27,069 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 14,238 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,36,23,804 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 25,50,276 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை 208.25 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 1,98,271 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 88.04 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →