கெளதம் அதானி 
இந்தியா

தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

பிரபல தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

பிரபல தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் 4ஆவது பெரும் பணக்காரரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அச்சுறுத்தல் வந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் படை கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செய்யப்படும் செலவு அதானியிடம் பெறப்படும் எனத் தெரிகிறது.  ஏற்கெனவே ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT