இந்தியா

தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

DIN

பிரபல தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் 4ஆவது பெரும் பணக்காரரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அச்சுறுத்தல் வந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் படை கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செய்யப்படும் செலவு அதானியிடம் பெறப்படும் எனத் தெரிகிறது.  ஏற்கெனவே ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT