இந்தியா

சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்!

DIN

சண்டீகர் சர்வதேச விமான நிலையத்துற்கு பகத் சிங் பெயரை சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல்வர் ஆனதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை வைக்க உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட இருப்பதாக அறிவித்து இருந்தார். 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சண்டீகர் சர்வதேச விமான நிலையத்துற்கு பகத் சிங் பெயரை சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இடையே நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT