முகப்பு
இந்தியா

தில்லி துணை முதல்வர் மீது வழக்குப் பதிவு

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
மணீஷ் சிசோடியா (கோப்புப் படம்)
பகிர்:

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தில்லி கலால் புதிய கொள்கை அமலாக்கத்தில் முறைகேடு நடைபெற்றதாக நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, தற்போது மணீஷ் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில், சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். 

இந்த சோதனையைத் தொடர்ந்து, 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.

இந்நிலையில், பண மோசடி வழக்கில் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  பாஜக அரசு சோதனைகளை நடத்தி வருவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →