இந்தியா

நாட்டில் புதிதாக 10,649 பேருக்கு கரோனா; மேலும் 36 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் 10,649 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

நாட்டில் ஒரேநாளில் 10,649 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,649 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 96,442  ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.22 சதவீதமாக உள்ளது. 

மேலும் 36 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,452 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து மேலும் 10,677 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,37,44,301 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.59 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,10,58,83,682 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.  ஒரே நாளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 27,17,979 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

முற்போக்கான சீர்திருத்தம்! புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

குரோவ் Q2 லாபம் 12% உயர்வு; வருவாய் சரிவு!

அறிகுறியே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகம்! செய்ய வேண்டியது என்ன? மருத்துவர் அறிவுரைகள்! | kidney

SCROLL FOR NEXT