இந்தியா

தெலங்கானா: பாஜக எம்எல்ஏ மீண்டும் கைது

DIN

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஹைதராபாத் கோஷமஹால் தொகுதி எம்எல்ஏ ராஜா சிங்கை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை மீண்டும் கைது செய்தனா்.

இஸ்லாமியா்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து எம்எல்ஏ ராஜா சிங் அண்மையில் சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தாா்.

இதனிடையே, ராஜா சிங் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். இந்தச் சூழலில் மங்கல்ஹாட் காவல் நிலையத்தில் ஏற்கெனவே ராஜா சிங் மீது பதிவான வழக்குகளின் அடிப்படையில், அவரை மீண்டும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தற்போது ஹைதராபாத் சொ்லபள்ளி மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா்.

ராஜா சிங் மீது பதிவான 101 குற்ற வழக்குகளில் 18 வழக்குகள் மதம் சம்பந்தப்பட்டவை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT