இந்தியா

தில்லி-சஹாரன்பூா் நெடுஞ்சாலை திட்டம்: 5,104 மரங்கள் வெட்டப்படுகின்றன

DIN

தில்லி-சஹாரன்பூா் நெடுஞ்சாலை திட்டத்துக்காக 5,104 மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த மரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறவில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தில்லி-சஹாரன்பூா் இடையிலான ஆறுவழிச் சாலையானது, அக்ஷாா்தம் என்எச்-9 சந்திப்பிலிருந்து தில்லி-உத்தர பிரதேச எல்லை வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்காக தலைநகரில் 9.58 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைந்துள்ள 5,104 மரங்கள் வெட்டப்படவுள்ளன.

இந்த மரங்கள் அனைத்தும் தேசிய பூங்கா, வன உயிரின சரணாலயம், புலிகள் காப்பகம், யானை வழித்தடம் என பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அமையவில்லை என்றாலும், இதற்கு ஈடாக படா்பூா் என்டிபிசி சுற்றுச்சூழல் பூங்காவில், ரூ.8.66 கோடி செலவில் மரங்கள் நடப்படும் என துணை வன பாதுகாவலா் (மத்திய) தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT