இந்தியா

பஞ்சாப்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை

பஞ்சாப் மாநிலம், பாம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பஞ்சாப் மாநிலம், பாம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலிஜித் சிங் காக் கூறுகையில், 

கியாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்தது தெரிய வந்தது. கொள்ளையர்கள் காரில் வந்த தடயங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் அதிகாலை 2.40 மணியளவில் நடந்ததாகவும், கொள்ளையர்கள் சுமார் ரூ17 லட்ச பணத்தை எடுத்துச் சென்றதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பாம் கிளை) உதவி மேலாளர் ஜஸ்வீர் சிங் கூறினார். 

சப்பேவால் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்களைத் தேடி வருவதாகவும் அவர்  கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினர் உரிமைகளை நசுக்கும் சாகசம்! ராகுல்

சிசோடியாவை தொடர்ந்து பகவந்த் மானை நலம் விசாரித்த ஹரியாணா முதல்வர்!

SCROLL FOR NEXT