இந்தியா

பஞ்சாப்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை

DIN

பஞ்சாப் மாநிலம், பாம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலிஜித் சிங் காக் கூறுகையில், 

கியாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்தது தெரிய வந்தது. கொள்ளையர்கள் காரில் வந்த தடயங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் அதிகாலை 2.40 மணியளவில் நடந்ததாகவும், கொள்ளையர்கள் சுமார் ரூ17 லட்ச பணத்தை எடுத்துச் சென்றதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பாம் கிளை) உதவி மேலாளர் ஜஸ்வீர் சிங் கூறினார். 

சப்பேவால் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்களைத் தேடி வருவதாகவும் அவர்  கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT