முகப்பு
இந்தியா

சாப்பாடு கொடுப்பதில் தாமதம்: சொந்த மகளையே கொலை செய்த தந்தை

உணவு வழங்குவதில் தாமதம் செய்ததாக பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
கோப்புப்படம்
பகிர்:

உணவு வழங்குவதில் தாமதம் செய்ததாக பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், ஹபுர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஃபரியாத்(55). இருவடைய மகள் ரேஷ்மா(21). இவர் சம்பவத்தன்று தனது தந்தைக்கு உணவு வழங்குவதில் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவதாம் ஏற்பட்டது. 

ஒரு கட்டத்தல் மகளின் பேச்சில் கோபமடைந்த தந்தை கத்தியை எடுத்து மகள் மீது சரமாரியாக தாக்கியுள்ளார்.

Advertisement

இதில் அவருடைய மகள் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல்அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான ரேஷ்மாவுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments