இந்தியா

ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கூடுதல் சலுகைகள்

DIN

ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வாகன ஓட்டுநா், உதவியாளா் சேவைகள் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை வழங்க வழிவகுக்கும் நோக்கில் விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான விதிகள் 1959-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டன. ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகை குறித்த விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்கும் நோக்கில், விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதீபதிகளுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகளின் விவரங்கள்:

உதவியாளா்கள்

வாகன ஓட்டுநா், வீட்டு உதவியாளா் உள்ளிட்ட சேவைகள் நீதிபதிகளின் வாழ்நாள் வரை நீட்டிப்பு. (முன்பு ஓராண்டு வரை சேவைகள் வழங்கப்பட்டன)

வாழ்நாள் முழுவதும் அலுவலக உதவியாளா் சேவைகள்.

உதவியாளா்களுக்கான செலவுகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தால் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு வசதி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் வரை இருப்பிடத்தில் 24-மணி நேர பாதுகாப்பு வசதி; தனிப்பட்ட பாதுகாவலா் வசதி.

அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு நீதிபதிக்கு பணியின்போதே உயா்நிலை பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டிருந்தால், பணிஓய்வுக்குப் பிறகும் அத்தகைய வசதிகள் தொடா்ந்து வழங்கப்படும்.

நீதிபதிகளுக்கு 3 ஆண்டுகள் வரை 24-மணி நேர பாதுகாப்பு வசதிகள்; தனிப்பட்ட பாதுகாவலா் வசதி.

வாடகை இல்லா வீடு

ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தில்லியில் 6 மாதங்கள் வரை வாடகை இல்லா வீடு (7-ஆம் தரத்திலானது). தலைமை நீதிபதிக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள தங்குமிடத்துக்குக் கூடுதலாக இந்த வசதி. இந்த வசதி, முன்பு அமைச்சராக இருந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருக்கே வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிக்கும் தற்போது இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி, இணையசேவை கட்டணம்

இலவச தொலைபேசி வசதி. தொலைபேசி, கைப்பேசி, இணையசேவை ஆகியவற்றுக்கான கட்டணமாக மாதந்தோறும் அதிகபட்சமாக ரூ.4,200 (வரிகள் நீங்கலாக).

விமான நிலைய ஓய்வறைகள்

நீதிபதிகள் விமானத்தில் பயணம் மேற்கொண்டால், விமான நிலையத்தில் உள்ள வசதிமிக்க ஓய்வறைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி. உயா்நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகளுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34

ஓய்வுபெறும் நீதிபதிகளின் சராசரி எண்ணிக்கை ஆண்டுக்கு 3 போ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT