இந்தியா

விநாயகர் சதுர்த்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

DIN

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட செய்தியில், “விநாயகரின் ஆசிர்வாதத்துடன், அனைவரின் வாழ்விலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி இருக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், “அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். விநாயகரின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT