இந்தியா

மாநகராட்சி தேர்தல்: தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள்!

DIN

தில்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தில்லி மாநகராட்சியின் 250 வார்டுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. 

டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ள தில்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 
அன்றைய தினம் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும் அதிகாலை 4 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதன்பின்னர் நாள் முழுவதும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT