இந்தியா

ஆயுர்வேத நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

DIN

கோவா, காஸியாபாத், தில்லி ஆகிய 3 இடங்களில் உள்ள ஆயுர்வேத நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். 

கோவா தலைநகர் பனாஜியில் வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி 9-வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதுபோல, கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA), காஸியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் (NIUM) மற்றும் தில்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் (NIH) ஆகிய 3 நிறுவனங்களை டிசம்பர் 11 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. 

அன்றைய தினம் வடக்கு கோவாவில் உருவாகி வரும் மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியையும் பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

90 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் சாா்பு -ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

கொலை முயற்சி வழக்கு: கேரள காங்கிரஸ் தலைவரை விடுதலை செய்தது உயா்நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

காதல் விவகாரத்தில் தீக்குளித்த காதலி உயிரிழப்பு

SCROLL FOR NEXT