கோப்புப்படம் 
இந்தியா

பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பலன்கள் என்ன? மத்திய அமைச்சர் விளக்கம்

பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தவும், வலுவான வங்கிகளை உருவாக்கவும் உதவியது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்தார்.

DIN


புதுதில்லி: வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தவும், வலுவான வங்கிகளை உருவாக்கவும் பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு உதவியதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:

"வங்கிகள் ஒருங்கிணைப்பின் நோக்கமானது, போட்டித்தன்மையுள்ள வலுவான வங்கிகளை உருவாக்குவதாகும். இதன் பலன்களாக,  இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான கிளைகள் மற்றும் ஏடிஎம்களுக்கான அணுகலைப் பெறுகின்றனர்.

வங்கிகள் ஒருங்கிணைப்பால் பெரிய அளவிலான கடன்களை வழங்கவும், வங்கிகளை மறுசீரமைக்கவும், வங்கிகளின் செயலாக்க மையங்களைக் கட்டுப்படுத்தவும் வங்கிகள் இணைப்பு உதவியது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

SCROLL FOR NEXT