இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 241ஆக குறைந்தது!  
இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 241ஆக குறைந்தது! 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 

இந்தியாவில் கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த பல வாரங்களாகவே கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை கொடுத்துள்ளது. 

அந்தவகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,74,190 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,244 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,647 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,39,299ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.95 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT