கோட்டா நகரில் 92வது நாள் ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல்!  
இந்தியா

கோட்டா நகரில் 92வது நாள் ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல்! 

ஒற்றுமை நடைப்பயணத்தின் 92வது நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோட்டா நகரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். 

PTI

ஒற்றுமை நடைப்பயணத்தின் 92வது நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோட்டா நகரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். 

காலை 6 மணிக்கு சூரியமுகி ஹனுமன் கோயிலில் பிரார்த்தனையைச் செய்துவிட்டு, தனது ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கினார். அவருடன் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை சச்சின் பைலட் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

சூர்யமுகி ஹனுமன் கோயிலிருந்து சுமார் 2.5 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட பிறகு, ராஜீவ் காந்தி நகரை அடைந்தார். அங்கு பயிற்சி நிறுவன மாணவர்கள் அவரை வரவேற்றனர். 

ராகுல் காந்தி சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசினார். மாணவர்களை "இந்தியாவின் எதிர்காலம்" என்றார். மேலும் "பாரத் ஜோடோ" கோஷங்களை எழுப்புமாறு கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.

மாணவர்களைத் தவிர, கட்சித் தொண்டர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஜாக்புராவிலிருந்து விமான நிலையம் வரை சாலையின் இருபுறமும் வரிசையாகக் கூடியிருந்தனர். 

பின்னர், ராஜீவ் காந்தி நகரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT