நாசிக்கில் பள்ளி அருகே இருந்து ஆண் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கின் தியோலாலி முகாம் பகுதியில் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் இன்று மீட்டுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க- மாண்டஸ் புயல் பாதிப்பு: வண்டலூர், கிண்டி பூங்காக்களில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
இதுகுறித் வன அதிகாரி விவேக் பதானே கூறியதாவது, "நாசிக்கின் தியோலாலி பகுதியில் இருந்து ஆண் சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். அது கேவி பள்ளி அருகே இருந்து மீட்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் சிறுத்தைகள் அப்பகுதியில் நடமாட வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.