இந்தியா

பஞ்சாபில் பரபரப்பு... காவல் நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்!

DIN

எல்லோயோர மாநிலமான பஞ்சாபில் காவல் நிலையம் மீது சனிக்கிழமை அதிகாலை ராக்கெட் எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என காவலர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானையொட்டி உள்ள தரன்தரன் மாவட்டம் அமிர்தசரஸ்-பதிண்டா நெடுஞ்சாலையில் உள்ள சக்ராலி காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலின் போது காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் சிங் மற்றும் பல காவலர்கள் பணியில் இருந்தர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக ராக்கெட் எறிகுண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடிக்காததால் எந்தவித உயிரிழப்பு போன்ற என்ற அசம்பாவித சம்பங்களும் நிகழவில்லை. ராக்கெட் ஏறிகுண்டு வெடித்திருந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும். இருப்பினும் காவல் நிலைய கட்டடத்திற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று கடந்த மாதம் மொகாலியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT