இந்தியா

'அவரின் நேரம் முடிந்துவிட்டது': முதல்வர் நிதீஷ் குமாரை விமர்சித்த பாஜக

DIN

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிக்காமல், கட்டுப்பாட்டை இழந்து கோபத்துடன் பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் செயலை பாஜக விமர்சித்து வருகிறது. 

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, நிதீஷ் குமாரின் காலம் முடிந்துவிட்டதாக பாஜக எம்.பி. சுஷில் மோடி விமர்சித்துள்ளார். 

சட்டப்பேரவையில் கட்டுப்பாட்டை இழந்து பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் செயல் குறித்து சுஷில் மோடி பேசியதாவது, 

''நிதீஷ் குமாருக்கான காலம் முடிந்துவிட்டது. அவர் தனது சுயநினைவை இழந்துவிட்டார். அவர் தனது பொறுமையையும் இழந்துவிட்டார். இதற்கு முன்பு அவருடைய சுபாவம் இப்படி இல்லை. அவரின் நேரம் முடிந்துவிட்டது.

தேஜஸ்வி யாதவ் (பிகாரின்) அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை வழிநடத்துவார் என நிதீஷ் குறிப்பிட்டார். அவ்வாறு நிதீஷ் செய்தால், அதனால் பலன் அடைவது பாஜகதான். பிகாரில் கடந்த மூன்று முறை நடைபெற்று முடிந்த 3 இடைத்தேர்தல்களில் பாஜக குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பெற்றுள்ளது என சுஷில் மோடி குறிப்பிட்டார். 

பிகார் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் பிகார் மாநிலம் சாரன் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் குறித்து ஆளும் கட்சியை விமர்சித்து பாஜக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதனால் பொறுமையை இழந்த முதல்வர் நிதீஷ் குமார், கட்டுப்பாட்டை இழந்து பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT