குணமடைந்து வரும் பயங்கரவாதி: விசாரணையை தீவிரப்படுத்தியது என்ஐஏ 
இந்தியா

குணமடைந்து வரும் பயங்கரவாதி: விசாரணையை தீவிரப்படுத்தியது என்ஐஏ

குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாதி என்ற சந்தேக நபர் குணமடைந்து வருவதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

PTI

மங்களூரு குக்கா் குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்கத் தொடங்கியநிலையில், குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாதி என்ற சந்தேக நபர் குணமடைந்து வருவதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் மொஹம்மது ஷாரிக், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றிருக்கும் அதிகாரிகள், அதன் மூலம் பல முக்கயி தகவல்களையும் திரட்டியுள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழுவினர், தென்னிந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும்ட விரைந்து, பயங்கரவாதக் குழுக்களின் தொடர்புகளை கண்டறியும் வகையில் விசாரணையை முடுக்கியிருக்கிறார்கள்.

45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக், குணமடைவதுதான் இந்த வழக்கின் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மங்களூருவில் நவ.19ஆம் தேதி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட குக்கா் வெடித்தது. பின்னா் நடந்த விசாரணையில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது உறுதியானது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பயங்கரவாதி முகமது ஷாரீக், ஆட்டோ ஓட்டுநா் புருஷோத்தம் பூஜாரி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இந்த வழக்கை கா்நாடக போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். 
இந்நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மாநில அரசு ஒப்படைத்தது. இதைத் தொடா்ந்து, தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் மங்களூரில் விசாரணையைத் தொடங்கினா்.

இது குறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையா் என்.சசிகுமாா் கூறுகையில், ‘கா்நாடக டிஜிபி பிரவீண் சூட், மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் முறைப்படி ஒப்படைத்தாா். வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுவிட்டன. இந்த பயங்கரவாத வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரீக்கிடம் ஏற்கெனவே விசாரணை நடந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாலும், அவரது உடல்நிலை மேம்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது’ என்றாா்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குண்டுவெடிப்புக்கு காரணமான பயங்கரவாதி முகமது ஷாரீக்கின் உடலில் 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. முகமது ஷாரீக்கிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளது உறுதியாகியுள்ளது. மாய இணையதளம் (டாா்க்வெப்) மூலம் அவா் வங்கிக்கணக்கை தொடங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் நிதி ரூபாயாக மாற்றப்பட்டு, மற்ற கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மைசூரில் இருந்த பலரின் வங்கிக்கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மைசூரில் உள்ள 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT