இந்தியா

உ.பி.யில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி, 2 பேர் காயம்

DIN

உத்தரப் பிரதேசத்தில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள். 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இருப்பினும் இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமை தீயணைப்பு அதிகாரி தீபக் ஷர்மா கூறுகையில், பாதுகாப்பு உபகரணங்களுக்கு எந்த அனுமதியும் இல்லாமல் தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கி வந்திருக்கிறது.

இந்த தொழிற்சாலைக்குள் எல்பிஜி சிலிண்டர்களும் இருந்தன. அவற்றில் ஏதேனும் வெடித்திருந்தால் பெரிய அளவு சம்பவம் நிகழ்ந்திருக்கும். தொழிற்சாலை உரிமையாளர் மீது எஃப்ஐஆர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT