இந்தியா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செமஸ்டர்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் முறை கொண்டுவரப்படும் என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது. 

DIN

அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் முறை கொண்டுவரப்படும் என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது. 

இந்த இரண்டு செமஸ்டர் முறை 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிக்கையினையும் வெளியிட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை-2020-ஐ சிறப்பாக செயல்படுத்துவதற்கு இந்தப் புதிய நடைமுறை பெரிதும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த இரண்டு செமஸ்டர் முறை அடுத்தக் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் என்ற தகவல் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த இரண்டு செமஸ்டர் நடைமுறை பின்பற்றப்படும். இந்த செமஸ்டர் முறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த செமஸ்டர் முறையில் பாடங்களை கற்றுக்கொள்வது மேலும் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT