முகப்பு
இந்தியா

வடகிழக்கின் வளர்ச்சிக்கான தடைகளை எனது அரசு நீக்கியுள்ளது: பிரதமர் மோடி

தனது அரசின் 8 ஆண்டுகால ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இருந்த அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
பகிர்:

தனது அரசின் 8 ஆண்டுகால ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இருந்த அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்கள் குழுவின் 50வது ஆண்டுகால நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.

அந்த நிகழ்வில் பிரதமர் பேசியதாவது: வான்வழிப் பயணத்தை வடகிழக்குப் பகுதிக்கு கொண்டுவந்துள்ளதன் மூலம் விவசாயிகளால் அவர்களது விளைபொருள்கள்களை எளிதில் ஏற்றுமதி செய்ய முடிகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர். வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்கள் அனைத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான எங்களது அரசு நீக்கியுள்ளது. வடகிழக்குப் பகுதி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ஊழல், வேற்றுமை, வன்முறை மற்றும் வாக்கு வங்கி அரசியலை எங்களது அரசு வடகிழக்குப் பகுதியில் நீக்கியுள்ளது. முன்னதாக, வடகிழக்குப் பகுதியினை பிளவுப்படுத்தும் முயற்சி நடந்தது. நாங்கள் அந்த பிளவுபடுத்தும் முயற்சினை தடுத்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →