முகப்பு
இந்தியா

உ.பி.: பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 21 டிசம்பர், 2022 at 12:37 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் பாதி எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

புலந்த்ஷாஹரின் வட்ட அதிகாரி(சிஓ) சியானா வந்தனா ஷர்மாவின் கூற்றுப்படி, 

எரிக்கப்பட்ட நபர் 28 வயதுடைய சோனு என்ற அபிஷேக் என அடையாளம் காணப்பட்டார். 

Advertisement

வைர ஃபிரோஸ்பூரைச் சேர்ந்த அபிஷேக்கின் உடலை அவரது தந்தை ஷியாம்வீர் மற்றும் மாமா ராம்வீர் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் 16-ம் தேதி அபிஷேக் 2 பேருடன் வீட்டை விட்டுச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் குற்றவாளிகளைப் பிடிக்க 3 போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சிஓ கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.