மணிப்பூரில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலியாகினர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் நோனி மாவட்டத்தில் இன்று பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பலியாகினர். பழைய கச்சார் சாலையில் பேருந்து திடீரென திருப்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் மேலும் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: டிச. 12ஆம் தேதி சபரிமலையில் குவிந்த 1.07 லட்சம் ஐயப்ப பக்தர்கள்
தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் பகுதிக்கு ஆய்வுச் சுற்றுலா சென்றதாகவும், மாணவிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.