முகப்பு
இந்தியா

பிகார் செங்கல்சூளையில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல் 

பிகார் மாநிலம் மோதிஹரியில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
பகிர்:

பிகார் மாநிலம் மோதிஹரியில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிகார் மாநிலம் மோதிஹரியில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் இறந்த செய்தி அறிந்து கவலை அடைந்தேன். இறந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். 

மேலும், இந்த விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும்,  காயமடைந்தோருக்கு ரூ. 50,000 நிதியுதவி அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.