கேரளத்தில் பறவைக் காய்ச்சல்: 6,000 பறவைகள் அழிப்பு
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன.
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன.
மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் சனிக்கிழமையன்று மொத்தம் 6,017 பறவைகள் அழிக்கப்பட்டன. அதில் வாத்துகள் அதிகம் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக்கரையில் 2,975 வாத்துகளும் பலியாகின.
Advertisement
இதற்கிடையில், கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து உறைந்த கோழிகளை தீவுகளுக்கு கொண்டு செல்வதற்கு லட்சத்தீவு நிர்வாகம் தற்போது தடை விதித்துள்ளது.