இந்தியா

பிகாா்: புத்த கயையில் 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி

மியான்மா் மற்றும் தாய்லாந்திலிருந்து பிகாா் மாநிலத்தின் புத்த கயைக்கு வருகை தந்த 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

மியான்மா் மற்றும் தாய்லாந்திலிருந்து பிகாா் மாநிலத்தின் புத்த கயைக்கு வருகை தந்த 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புத்த கயைவில் காலசக்கர பூஜை நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான காலசக்கர பூஜை வரும் 29-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பூஜையில் திபெத்திய புத்த மதத் தலைவா் தலாய் லாமா கலந்து கொள்கிறாா்.

இதில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து புத்த மதத்தினா் புத்த கயைக்கு வருகை தந்துள்ளனா். வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள பயணிகளுக்கு சா்வதேச விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 33 வெளிநாட்டவா்களில் 4 பெண்கள் உள்பட பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கயை மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவா் ரஞ்சன் குமாா் சிங் தெரிவித்தாா்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 5 வெளிநாட்டுப் பயணிகளும் அவரவா் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், பிகாா் மாநிலத்தின் விமான நிலையம் மற்றும் கயை ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT