இந்தியா

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் நெரிசல்: 8 பேர் பலி

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக, வடிநீர் கால்வாயில் விழுந்து ஒரு பெண் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

DIN

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக, வடிநீர் கால்வாயில் விழுந்து ஒரு பெண் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
நெல்லூர் மாவட்டத்தின் கண்டுகுர் நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியின்போது மாநில எதிர்க்கட்சித் தலைவரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என். சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.
கூட்டம் நடைபெற்ற இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடியதையடுத்து, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, அருகே இருந்த வடிநீர் கால்வாயில் விழுந்ததில் ஒரு பெண் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்த சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக அறிவித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவரது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT