இந்தியா

போர் விமானத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

DIN

நீட்டிக்கப்பட்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தாக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விமானப் படை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது. 

இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

சுகோய் 30 ராணுவ விமானத்திலிருந்து கடலில் இருக்கும் கப்பலை இலக்காகக் கொண்டு தாக்கும் பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை வியாழக்கிழமை வங்களா விரிகுடா கடலில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் திட்டமிட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்தது. 400 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் இந்த வகை ஏவுகணை சோதனை இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, டிஆர்டிஓ, பிஏபிஎல், மற்றும் ஹெச்ஏஎல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT